Kural 335 of 1330
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்
Naachchetru Vikkulmel Vaaraamun Nalvinai Mersendru Seyyap Patum
Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,Arouse thyself, and do good deeds beyond the power of death
விளக்கம் — மு. வரதராசன்
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
விளக்கம் — கலைஞர்
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்
Meaning (English)
Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.