Thirukkuralagam
Kural 34 of 1330

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற.

Manaththukkan Maasilan Aadhal Anaiththu Aran Aakula Neera Pira

Spotless be thou in mind! This only merits virtue's name; All else, mere pomp of idle sound, no real worth can claim

விளக்கம் — மு. வரதராசன்

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

விளக்கம் — சாலமன் பாப்பையா

மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

விளக்கம் — கலைஞர்

மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை

Meaning (English)

Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.

Open the interactive app →