Kural 341 of 1330
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.
Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal Adhanin Adhanin Ilan
From whatever, aye, whatever, man gets free,From what, aye, from that, no more of pain hath he
விளக்கம் — மு. வரதராசன்
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
விளக்கம் — சாலமன் பாப்பையா
எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.
விளக்கம் — கலைஞர்
ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை
Meaning (English)
Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.