Thirukkuralagam
Kural 353 of 1330

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து.

Aiyaththin Neengith Thelindhaarkku Vaiyaththin Vaanam Naniya Thutaiththu

When doubts disperse, and mists of error rollAway, nearer is heav'n than earth to sage's soul

விளக்கம் — மு. வரதராசன்

ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

விளக்கம் — கலைஞர்

ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்

Meaning (English)

Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt.

Open the interactive app →