Kural 361 of 1330
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து.
Avaaenpa Ellaa Uyirkkum Enj Gnaandrum Thavaaap Pirappeenum Viththu
The wise declare, through all the days, to every living thingThat ceaseless round of birth from seed of strong desire doth spring
விளக்கம் — மு. வரதராசன்
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.
விளக்கம் — கலைஞர்
ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்
Meaning (English)
(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.