Kural 368 of 1330
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும்.
Avaaillaark Killaakun Thunpam Aqdhuntel Thavaaadhu Menmel Varum
Affliction is not known where no desires abide; Where these are, endless rises sorrow's tide
விளக்கம் — மு. வரதராசன்
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.
விளக்கம் — கலைஞர்
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்
Meaning (English)
There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.