Thirukkuralagam
Kural 381 of 1330

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.

Pataikuti Koozhamaichchu Natparan Aarum Utaiyaan Arasarul Eru

An army, people, wealth, a minister, friends, fort: six things-Who owns them all, a lion lives amid the kings

விளக்கம் — மு. வரதராசன்

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.

விளக்கம் — கலைஞர்

ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்

Meaning (English)

He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

Open the interactive app →