Thirukkuralagam
Kural 384 of 1330

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு.

Aranizhukkaa Thallavai Neekki Maranizhukkaa Maanam Utaiya Tharasu

Kingship, in virtue failing not, all vice restrains,In courage failing not, it honour's grace maintains

விளக்கம் — மு. வரதராசன்

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.

விளக்கம் — கலைஞர்

அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்

Meaning (English)

He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.

Open the interactive app →