Kural 389 of 1330
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
Sevikaippach Chorporukkum Panputai Vendhan Kavikaikkeezhth Thangum Ulaku
The king of worth, who can words bitter to his ear endure,Beneath the shadow of his power the world abides secure
விளக்கம் — மு. வரதராசன்
குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.
விளக்கம் — கலைஞர்
காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்
Meaning (English)
The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.