Thirukkuralagam
Kural 392 of 1330

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum Kannenpa Vaazhum Uyirkku

The twain that lore of numbers and of letters giveAre eyes, the wise declare, to all on earth that live

விளக்கம் — மு. வரதராசன்

எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

விளக்கம் — கலைஞர்

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்

Meaning (English)

Letters and numbers are the two eyes of man.

Open the interactive app →