Kural 40 of 1330
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.
Seyarpaala Thorum Arane Oruvarku Uyarpaala Thorum Pazhi
'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun
விளக்கம் — மு. வரதராசன்
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
விளக்கம் — சாலமன் பாப்பையா
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.
விளக்கம் — கலைஞர்
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்
Meaning (English)
That is virtue which each ought to do, and that is vice which each should shun.