Kural 403 of 1330
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின்.
Kallaa Thavarum Naninallar Katraarmun Sollaa Thirukkap Perin
The blockheads, too, may men of worth appear,If they can keep from speaking where the learned hear
விளக்கம் — மு. வரதராசன்
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.
விளக்கம் — கலைஞர்
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்
Meaning (English)
The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.