Thirukkuralagam
Kural 406 of 1330

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர்.

Ularennum Maaththiraiyar Allaal Payavaak Kalaranaiyar Kallaa Thavar

'They are': so much is true of men untaught; But, like a barren field, they yield us nought

விளக்கம் — மு. வரதராசன்

கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

விளக்கம் — கலைஞர்

கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்

Meaning (English)

The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.

Open the interactive app →