Kural 408 of 1330
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட் ட திரு.
Nallaarkan Patta Varumaiyin Innaadhe Kallaarkan Patta Thiru
To men unlearned, from fortune's favour greater-evil springsThan poverty to men of goodly wisdom brings
விளக்கம் — மு. வரதராசன்
கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.
விளக்கம் — கலைஞர்
முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்
Meaning (English)
Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.