Thirukkuralagam
Kural 414 of 1330

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

Katrila Naayinung Ketka Aqdhoruvarku Orkaththin Ootraan Thunai

Though learning none hath he, yet let him hear alway:In weakness this shall prove a staff and stay

விளக்கம் — மு. வரதராசன்

நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.

விளக்கம் — கலைஞர்

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்

Meaning (English)

Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staf in adversity.

Open the interactive app →