Thirukkuralagam
Kural 423 of 1330

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

Epporul Yaaryaarvaaik Ketpinum Apporul Meypporul Kaanpa Tharivu

Though things diverse from divers sages' lips we learn,'Tis wisdom's part in each the true thing to discern

விளக்கம் — மு. வரதராசன்

எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

விளக்கம் — கலைஞர்

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்

Meaning (English)

To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.

Open the interactive app →