Thirukkuralagam
Kural 432 of 1330

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு.

Ivaralum Maanpirandha Maanamum Maanaa Uvakaiyum Edham Iraikku

A niggard hand, o'erweening self-regard, and mirthUnseemly, bring disgrace to men of kingly brith

விளக்கம் — மு. வரதராசன்

பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.

விளக்கம் — கலைஞர்

மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்

Meaning (English)

Avarice, undignified pride, and low pleasures are faults in a king.

Open the interactive app →