Thirukkuralagam
Kural 439 of 1330

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.

Viyavarka Egngnaandrum Thannai Nayavarka Nandri Payavaa Vinai

Never indulge in self-complaisant mood,Nor deed desire that yields no gain of good

விளக்கம் — மு. வரதராசன்

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.

விளக்கம் — கலைஞர்

எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது

Meaning (English)

Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.

Open the interactive app →