Thirukkuralagam
Kural 45 of 1330

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.

Anpum Aranum Utaiththaayin Ilvaazhkkai Panpum Payanum Adhu

If love and virtue in the household reign,This is of life the perfect grace and gain

விளக்கம் — மு. வரதராசன்

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

விளக்கம் — கலைஞர்

இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை

Meaning (English)

If the married life possess love and virtue, these will be both its duty and reward.

Open the interactive app →