Thirukkuralagam
Kural 463 of 1330

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்.

Aakkam Karudhi Mudhalizhakkum Seyvinai Ookkaar Arivutai Yaar

To risk one's all and lose, aiming at added gain,Is rash affair, from which the wise abstain

விளக்கம் — மு. வரதராசன்

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

விளக்கம் — கலைஞர்

பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்

Meaning (English)

Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.

Open the interactive app →