Kural 467 of 1330
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.
Ennith Thunika Karumam Thunindhapin Ennuvam Enpadhu Izhukku
Think, and then dare the deed! Who cry,'Deed dared, we'll think,' disgraced shall be
விளக்கம் — மு. வரதராசன்
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.
விளக்கம் — கலைஞர்
நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு
Meaning (English)
Consider, and then undertake a matter; after having undertaken it, to say “We will consider,” is folly.