Thirukkuralagam
Kural 476 of 1330

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்.

Nunikkompar Erinaar Aqdhiran Thookkin Uyirkkirudhi Aaki Vitum

Who daring climbs, and would himself upraiseBeyond the branch's tip, with life the forfeit pays

விளக்கம் — மு. வரதராசன்

ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.

விளக்கம் — கலைஞர்

தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்

Meaning (English)

There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.

Open the interactive app →