Kural 485 of 1330
காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.
Kaalam Karudhi Iruppar Kalangaadhu Gnaalam Karudhu Pavar
Who think the pendant world itself to subjugate,With mind unruffled for the fitting time must wait
விளக்கம் — மு. வரதராசன்
உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.
விளக்கம் — கலைஞர்
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்
Meaning (English)
They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.