Thirukkuralagam
Kural 487 of 1330

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

Pollena Aange Puramveraar Kaalampaarththu Ulverppar Olli Yavar

The glorious once of wrath enkindled make no outward show,At once; they bide their time, while hidden fires within them glow

விளக்கம் — மு. வரதராசன்

அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.

விளக்கம் — கலைஞர்

பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்

Meaning (English)

The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within.

Open the interactive app →