Thirukkuralagam
Kural 493 of 1330

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்.

Aatraarum Aatri Atupa Itanarindhu Potraarkan Potrich Cheyin

E'en weak ones mightily prevail, if place of strong defence,They find, protect themselves, and work their foes offence

விளக்கம் — மு. வரதராசன்

தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்,

விளக்கம் — சாலமன் பாப்பையா

பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

விளக்கம் — கலைஞர்

தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்

Meaning (English)

Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.

Open the interactive app →