Thirukkuralagam
Kural 504 of 1330

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.

Kunamnaatik Kutramum Naati Avatrul Mikainaati Mikka Kolal

Weigh well the good of each, his failings closely scan,As these or those prevail, so estimate the man

விளக்கம் — மு. வரதராசன்

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

விளக்கம் — கலைஞர்

ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்

Meaning (English)

Let (a king) consider (a man’s) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.

Open the interactive app →