Kural 511 of 1330
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.
Nanmaiyum Theemaiyum Naati Nalampurindha Thanmaiyaan Aalap Patum
Who good and evil scanning, ever makes the good his joy; Such man of virtuous mood should king employ
விளக்கம் — மு. வரதராசன்
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.
விளக்கம் — கலைஞர்
நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்
Meaning (English)
He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.