Kural 523 of 1330
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று.
Alavalaa Villaadhaan Vaazhkkai Kulavalaak Kotindri Neernirain Thatru
His joy of life who mingles not with kinsmen gathered round,Is lake where streams pour in, with no encircling bound
விளக்கம் — மு. வரதராசன்
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.
விளக்கம் — கலைஞர்
உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்
Meaning (English)
The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.