Kural 542 of 1330
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல் நோக்கி வாழுங் குடி.
Vaanokki Vaazhum Ulakellaam Mannavan Kol Nokki Vaazhung Kuti
All earth looks up to heav'n whence raindrops fall; All subjects look to king that ruleth all
விளக்கம் — மு. வரதராசன்
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
விளக்கம் — கலைஞர்
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது
Meaning (English)
When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.