Thirukkuralagam
Kural 544 of 1330

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு.

Kutidhazheeik Kolochchum Maanila Mannan Atidhazheei Nirkum Ulaku

Whose heart embraces subjects all, lord over mighty landWho rules, the world his feet embracing stands

விளக்கம் — மு. வரதராசன்

குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.

விளக்கம் — கலைஞர்

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்

Meaning (English)

The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.

Open the interactive app →