Kural 547 of 1330
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்.
Iraikaakkum Vaiyakam Ellaam Avanai Muraikaakkum Muttaach Cheyin
The king all the whole realm of earth protects; And justice guards the king who right respects
விளக்கம் — மு. வரதராசன்
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.
விளக்கம் — கலைஞர்
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்
Meaning (English)
The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.