Kural 555 of 1330
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
Allarpattu Aatraadhu Azhudhakan Neerandre Selvaththaith Theykkum Patai
His people's tears of sorrow past endurance, are not theySharp instruments to wear the monarch's wealth away
விளக்கம் — மு. வரதராசன்
(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
விளக்கம் — சாலமன் பாப்பையா
தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.
விளக்கம் — கலைஞர்
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்
Meaning (English)
Will not the tears, shed by a people who cannot endure the oppression which they sufer (from their king), become a saw to waste away his wealth ?