Kural 559 of 1330
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.
Muraikoti Mannavan Seyyin Uraikoti Ollaadhu Vaanam Peyal
Where king from right deflecting, makes unrighteous gain,The seasons change, the clouds pour down no rain
விளக்கம் — மு. வரதராசன்
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.
விளக்கம் — கலைஞர்
முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது
Meaning (English)
If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.