Kural 565 of 1330
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து.
Arunjevvi Innaa Mukaththaan Perunjelvam Peeykan Tannadhu Utaiththu
Whom subjects scarce may see, of harsh forbidding countenance; His ample wealth shall waste, blasted by demon's glance
விளக்கம் — மு. வரதராசன்
எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.
விளக்கம் — கலைஞர்
யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்
Meaning (English)
The great wealth of him who is dificult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.