Thirukkuralagam
Kural 571 of 1330

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு.

Kannottam Ennum Kazhiperung Kaarikai Unmaiyaan Untiv Vulaku

Since true benignity, that grace exceeding great, residesIn kingly souls, world in happy state abides

விளக்கம் — மு. வரதராசன்

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

விளக்கம் — கலைஞர்

இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது

Meaning (English)

The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.

Open the interactive app →