Kural 581 of 1330
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்.
Otrum Uraisaandra Noolum Ivaiyirantum Thetrenka Mannavan Kan
These two: the code renowned and spies,In these let king confide as eyes
விளக்கம் — மு. வரதராசன்
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.
விளக்கம் — கலைஞர்
நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்
Meaning (English)
Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.