Thirukkuralagam
Kural 585 of 1330

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று.

Kataaa Uruvotu Kannanjaadhu Yaantum Ukaaamai Valladhe Otru

Of unsuspected mien and all-unfearing eyes,Who let no secret out, are trusty spies

விளக்கம் — மு. வரதராசன்

ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.

விளக்கம் — கலைஞர்

சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்

Meaning (English)

A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man’s face, and who never reveals (his purpose).

Open the interactive app →