Kural 59 of 1330
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை.
Pukazhpurindha Illilorkku Illai Ikazhvaarmun Erupol Peetu Natai
Who have not spouses that in virtue's praise delight,They lion-like can never walk in scorner's sight
விளக்கம் — மு. வரதராசன்
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
விளக்கம் — சாலமன் பாப்பையா
புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.
விளக்கம் — கலைஞர்
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்
Meaning (English)
The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.