Thirukkuralagam
Kural 590 of 1330

சிறப்பறிய ஒற்ற஧ன்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை.

Sirappariya Otrinkan Seyyarka Seyyin Purappatuththaan Aakum Marai

Reward not trusty spy in others' sight,Or all the mystery will come to light

விளக்கம் — மு. வரதராசன்

ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.

விளக்கம் — கலைஞர்

ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்

Meaning (English)

Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret.

Open the interactive app →