Thirukkuralagam
Kural 616 of 1330

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.

Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai Inmai Pukuththi Vitum

Effort brings fortune's sure increase,Its absence brings to nothingness

விளக்கம் — மு. வரதராசன்

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

விளக்கம் — கலைஞர்

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்

Meaning (English)

Labour will produce wealth; idleness will bring poverty.

Open the interactive app →