Kural 62 of 1330
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.
Ezhupirappum Theeyavai Theentaa Pazhipirangaap Panputai Makkat Perin
Who children gain, that none reproach, of virtuous worth,No evils touch them, through the sev'n-fold maze of birth
விளக்கம் — மு. வரதராசன்
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
விளக்கம் — சாலமன் பாப்பையா
பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.
விளக்கம் — கலைஞர்
பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது
Meaning (English)
The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.