Kural 626 of 1330
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர்.
Atremendru Allar Patupavo Petremendru Ompudhal Thetraa Thavar
Who boasted not of wealth, nor gave it all their heart,Will not bemoan the loss, when prosperous days depart
விளக்கம் — மு. வரதராசன்
செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.
விளக்கம் — சாலமன் பாப்பையா
பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?
விளக்கம் — கலைஞர்
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?
Meaning (English)
Will those men ever cry out in sorrow, “we are destitute” who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.