Kural 628 of 1330
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்.
Inpam Vizhaiyaan Itumpai Iyalpenpaan Thunpam Urudhal Ilan
He seeks not joy, to sorrow man is born, he knows; Such man will walk unharmed by touch of human woes
விளக்கம் — மு. வரதராசன்
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.
விளக்கம் — சாலமன் பாப்பையா
உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.
விளக்கம் — கலைஞர்
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை
Meaning (English)
That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).