Thirukkuralagam
Kural 630 of 1330

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

Innaamai Inpam Enakkolin Aakundhan Onnaar Vizhaiyunj Chirappu

Who pain as pleasure takes, he shall acquireThe bliss to which his foes in vain aspire

விளக்கம் — மு. வரதராசன்

ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.

விளக்கம் — கலைஞர்

துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்

Meaning (English)

The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.

Open the interactive app →