Kural 652 of 1330
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை.
Endrum Oruvudhal Ventum Pukazhotu Nandri Payavaa Vinai
From action evermore thyself restrainOf glory and of good that yields no gain
விளக்கம் — மு. வரதராசன்
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.
விளக்கம் — கலைஞர்
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்
Meaning (English)
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).