Kural 657 of 1330
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை.
Pazhimalaindhu Eydhiya Aakkaththin Saandror Kazhinal Kurave Thalai
Than store of wealth guilt-laden souls obtain,The sorest poverty of perfect soul is richer gain
விளக்கம் — மு. வரதராசன்
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.
விளக்கம் — கலைஞர்
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்
Meaning (English)
Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds.