Kural 66 of 1330
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.
Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham Makkal Mazhalaichchol Kelaa Thavar
'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,Who music of their infants' lisping lips have never heard
விளக்கம் — மு. வரதராசன்
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
விளக்கம் — கலைஞர்
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்
Meaning (English)
“The pipe is sweet, the lute is sweet,” say those who have not heard the prattle of their own children.