Thirukkuralagam
Kural 667 of 1330

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.

Uruvukantu Ellaamai Ventum Urulperundherkku Achchaani Annaar Utaiththu

Despise not men of modest bearing; Look not at form, but what men are:For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car

விளக்கம் — மு. வரதராசன்

உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.

விளக்கம் — கலைஞர்

உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்

Meaning (English)

Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.

Open the interactive app →