Thirukkuralagam
Kural 669 of 1330

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.

Thunpam Uravarinum Seyka Thunivaatri Inpam Payakkum Vinai

Though toil and trouble face thee, firm resolve hold fast,And do the deeds that pleasure yield at last

விளக்கம் — மு. வரதராசன்

(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.

விளக்கம் — கலைஞர்

இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்

Meaning (English)

Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).

Open the interactive app →