Thirukkuralagam
Kural 674 of 1330

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும்.

Vinaipakai Endrirantin Echcham Ninaiyungaal Theeyechcham Polath Therum

With work or foe, when you neglect some little thing, If you reflect, like smouldering fire, 'twill ruin bring

விளக்கம் — மு. வரதராசன்

செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க)

விளக்கம் — கலைஞர்

எற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்

Meaning (English)

Reflect on this: Both efforts and enemies, if left unfinished, Can destroy like an unextinguished fire

Open the interactive app →